கரூரில் செப்., 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கரூர்: கரூரில் வரும், 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கி-றது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, ஒவ்-வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கரூர் வெண்-ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும், 20 காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடத்தப்படவுள்-ளது. 50க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவ-னங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 9499055912 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்-ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.