உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற கோரிக்கை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற கோரிக்கை

குளித்தலை: குளித்தலை சுங்ககேட், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், பெட்ரோல் பங்க் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரிய அளவில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையின் அருகே உள்ள வேப்ப மரக்கிளைகள் உரசி பலகை சேதமடைகிறது.மேலும், மரக்கிளைகள் வளர்ந்து, பெயர் பலகையை மறைத்துள்-ளதால், ஊர் பெயர், செல்லும் வழி, கி.மீ., உள்ளிட்ட விபரங்கள் தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை