உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

குளித்தலை : குளித்தலை அடுத்த ரெங்கநாதபுரம் பஞ்., கட்டளை காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, மலையாள சுவாமி கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'பொலிரோ பிக்அப்' சரக்கு வாகனத்தில் ஒரு யூனிட் காவிரி மணல் கடத்-தியது தெரியவந்தது. டிரைவர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தாசில்தார், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மாயனுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ