| ADDED : ஜூலை 26, 2024 02:32 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்-பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீர-வள்ளி, வீரகுமரான்பட்டி, மகாதானபுரம், பொய்கைபுத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வரு-கின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்-பேட்டை கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை நடந்தது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், ரஸ்-தாளி தார், 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.