உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருவேல மரங்களுக்கு தீ வைப்பு 3 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

கருவேல மரங்களுக்கு தீ வைப்பு 3 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

கரூர்: கரூர் அருகே, சீமை கருவேல மரங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், மூன்று மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.கரூர் மாவட்டம், திருகாம்புலியூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. நேற்று பள்ளிக்கு அருகில் வெட்டப்பட்ட, கருவேல மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட புகை காரணமாக பள்ளியில் இருந்த, எஸ்.எஸ்.எல்.சி., மாணவிகள் மூன்று பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும் கார் மூலம் அழைத்து செல்லப்பட்டு, தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை