உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கலை கல்லுாரியில் ௨ம் கட்ட கலந்தாய்வு

அரசு கலை கல்லுாரியில் ௨ம் கட்ட கலந்தாய்வு

குளித்தலை : குளித்தலை அரசு கலை கல்லுாரியில் வரும், 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.குளித்தலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அன்பரசு (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கை:இன சுழற்சி அடிப்படையில் வரும், 24, 25, 26, ஆகிய மூன்று நாட்கள் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. முதலாவதாக 24 காலை, 10:00 மணிக்கு இளம் வணிகவியல், இளம் வணிக நிர்வாகவியல், இளம் வணிக கணினி பயன்பாட்டியல் ஆகிய மூன்று துறைகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.25 காலை இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல் பயன்பாட்டியல், வேதியியல், இயற்பியல், மின்னணுவியல், உணவு ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது. 26 காலை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.இணையதள விண்ணப்ப நகல்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் நகல்களுடன், 5 புகைப்படம் மற்றும் உரிய கட்டணத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்