உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரத்தில் இறந்து கிடந்த மயில்

சாலையோரத்தில் இறந்து கிடந்த மயில்

குளித்தலை : நச்சலுாரில், சாலையோரத்தில் ஆண் மயில் இறந்த கிடந்ததை வனத்துறையினர் மீட்டனர்.குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் சாலையோரத்தில் நேற்று காலை ஆண் மயில் இறந்து கிடப்பதாக, டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்தரூபனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, குளித்தலை வனக்காவலர் சிவரஞ்சனிக்கு நச்சலுார் வி.ஏ.ஓ., தகவல் கொடுத்தார்.இதையடுத்து இறந்த ஆண் மயிலை மீட்டு, நச்சலுார் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திக் வசம் ஓப்படைக்கப்பட்டது. இறப்பு குறித்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மயிலை வனப்பகுதியில் மண்ணில் புதைக்க எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ