உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்

முகத்தில் கரியை பூசி மனு கொடுக்க வந்த நபர்

கரூர்: கிருஷ்ணராயபுரம், மேளக்கார தெருவை சேர்ந்த அமிர்தா-னந்தம் என்பவர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து மீது, முறைகேடு தொடர்பாக மனு அளித்ததற்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி, முகத்தில் கரியை பூசி கொண்டு மனு கொடுக்க வந்தார்.அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து வருகிறேன். ஆத்திரம-டைந்த கும்பல், என்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்-ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, விசாரணை முறையாக நடந்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ