உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., ஆலையில்ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்புகரூர், அக். 29-கரூர் அருகில் உள்ள புகழூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். நமது இந்திய நாட்டில் ஊழலை ஒழித்திட, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்தியா முழுவதும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்., 28 முதல் நவ., 3 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுகொண்டனர். நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ