அரசு மருத்துவமனை முன் தகராறு:இருவருக்கு காப்பு
குளித்தலை: குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்புறம், நேற்று காலை 6:00 மணியளவில் சத்தியமங்கலத்தை சேர்ந்த அறிவழகன், 37, குளித்தலை தெப்பக்குளம் தெருவை சேர்ந்த தருண், 21, இருவரும் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்தைகளால் பேசி தகராறு செய்து கொண்டனர். இதையடுத்து இருவரையும், குளித்தலை எஸ்.எஸ்.ஐ., செல்வகுமார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.