உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி புஷ்பா. இவரது மகள் இந்து பிரியா, 20, தரகம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணியளவில் வீட்டில் இருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.சாலை அமைக்காததால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ