உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரங்கநாத சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்

கரூர், ஜன. 4- கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நான்காவது நாள், பகல் பத்து உற்வசம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 31ல் தொடங்கியது. நேற்று நான்காவது நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. அதில், பெருமாள் தாயாருடன் சேர்த்தி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.வரும், 9ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிப்பார். 10 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை