உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

கரூர்: திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் வழியாக செல்லும் பொதுமக்களின் குடிநீர் வச-திக்காக, கருப்பு நிற சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்-ளன. அதில், நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் டூவீலர் மற்றும் கார்களில் செல்லும் பொது-மக்கள் அதை குடிநீராக பயன்படுத்தினர். நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்காமல் விட்டனர்.இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் தற்போது சேதமடைந்துள்ளன. சில பகுதி-களில் உள்ள, தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்படுவது இல்லை. எனவே, பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்றி விட்டு, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை