சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
கரூர்: நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை-யொட்டி பக்தர்கள் குவிந்தனர்.கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, ஸ்ரீதேவி பூதேவி உடனான மூலவர் சீனிவாச பெருமாள், சிறப்பு பூக்கள் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைதொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.