வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று ஏராளமான பக்-தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்-யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திரு-வீதி உலா நடந்து வருகிறது. வரும், 10 ல் மாலை திருக்கல்யாண உற்சவம், 12 ல் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. இந்நி-லையில், நேற்று முன்றாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். அதேபோல், முடி காணிக்கை செலுத்தவும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கோவிலை சுற்றி உள்ள திருமண மண்டபங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால், 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.