உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரேஷன் ஊழியர் போனசில் பாகுபாடு கூடாது தி.மு.க., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

ரேஷன் ஊழியர் போனசில் பாகுபாடு கூடாது தி.மு.க., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

கரூர்: 'ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாகுபாடு இல்லாமல் போனஸ் வழங்க வேண்டும்' என, தி.மு.க.,வின் தொ.மு.ச., கூட்டுறவு ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சர-ணவன் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், 84 கூட்டுறவு சங்கங்களின் கீழ், 514 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தீபாவளி பண்டிக்கை முன்னிட்டு, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்-பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பணிபுரியம் ரேஷன் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசு அறிவித்தப்படி, 20 சதவீதம் போனஸ் தொகையை, அனைத்து கூட்டுறவு சங்கங்-களும் வழங்க வேண்டும். இதில், எவ்விதமான பாகுபாடு இல்-லாமல் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை