உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்டர் மீடியனை பெரிதாக்க ஓட்டுனர்கள் வேண்டுகோள்

சென்டர் மீடியனை பெரிதாக்க ஓட்டுனர்கள் வேண்டுகோள்

கரூர்: கரூர் அருகே, ஐந்து சாலை பிரிவில், போக்குவரத்து வசதிக்காக சென்டர் மீடியன் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாங்கல் மற்றும் பசுபதிபாளையம் பகுதியில் இருந்து வாகனங்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில், பலர் காயமடைகின்றனர். குறிப்பாக, அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தின், இணைப்பு சாலை பகுதியில் சென்டர் மீடியன் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்டர் மீடியனை பெரிதாக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ