வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான மின்கம்பங்கள்
வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான மின்கம்பங்கள்கரூர், செப். 26-வாங்கல்-மோகனுார் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின் கம்பங்களில் விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த, 2014 ல் பிப்ரவரி மாதம், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.அப்போது, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்காததால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். மேலும், பாலத்தில் இரவு நேரத்தில் வழிப்பறி, நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதனால் பாலத்தில், ஒரு பக்கத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டன. ஆனால், அனைத்து மின் கம்பங்களிலும், விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இரவு நேரத்தில் பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இதனால், பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, மின் கம்பங்கள் காட்சி பொருளாக உள்ளது. எனவே, வாங்கல்-மோகனுார் உயர்மட்ட பாலத்தில் போடப் பட்ட மின்கம்பங்களில், விளக்குகளை எரிய வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.