உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது

மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது

குளித்தலை:திருச்சியை சேர்ந்த, 46 வயதுடையவர் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவருக்கு, 13, 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், பெரிய மகளுடன் தகாத உறவில் ஈடுபடுவதாக, திருச்சி டி.ஐ.ஜி.,யிடம் மனைவி புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.ஐ.ஜி., உத்தரவின்படி, குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தினார். அதில், மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, தந்தையை கைது செய்தனர். கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை