உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

கிருஜ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் தேக்கி வைக்-கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்துக்கொண்டு வந்து கட்டளை கால்வாய் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், பாறை மீன், 180 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், திருக்காம்புலியூர், மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்-பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்-றனர். நேற்று, 300 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்-டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை