உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

கரூர்: கரூர் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.அசாம் மாநிலம், சந்திப்பூர் மாவட்டம் தடகா விபரி பகுதியை சேர்ந்தவர் கோபால் சர்மா, 28; இவர் மனைவி அனிமா, 25; மகன் பாகர் சர்மா, 2; புகழூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் கோபால் சர்மா வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம், கோபால் சர்மா வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி அனிமா, மகன் பாகர் சர்மா ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சிய-டைந்த கோபால் சர்மா, போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ