உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிள்ளபாளையம் பகுதியில் வாழை சாகுபடி பணி தீவிரம்

பிள்ளபாளையம் பகுதியில் வாழை சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் பகுதியில், வாழை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை, வெற்றிலை மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், வாழை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தற்போது, புதிய வாழை ரக கன்று கள் நடப்பட்டு வாய்க்கால் நீர் கொண்டு பாய்ச்சப்படுகிறது. மேலும் களைகளை அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வாழை சாகுபடி பரப்பு குறைந்ததால், மீண்டும் விவசாயிகள் வாழைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தற்போது வாழைத்தார்கள் சீரான விலையில் விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ