உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு

குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு

குளித்தலை: குளித்தலையில் நடைபெறவிருந்த, ஜீப் ஏலம் ஒத்திவைக்கப்பட்-டது.குளித்தலை யூனியனுக்கு சொந்தமான, இரண்டு ஜீப் ஏலம் விடு-வதாக முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, 11:30 மணியளவில் நடந்த ஏலத்திற்கு திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்ட பகுதியில் இருந்து, 50-க்கும் மேற்-பட்ட ஏலத்தாரர்கள் முன் தொகை செலுத்த வந்திருந்தனர்.யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், யூனியன் ஏ.பி.டி.ஓ., விஜயகுமார், மேலாளர் திருஞானம் முன்னிலையில் ஏலதாரர்கள் முன் தொகையை செலுத்தினர். அப்போது, திடீ-ரென கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கமிஷனர் ராஜேந்-திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என, தகவல் வந்ததால் ஜீப் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட, மூன்று மாவட்டத்தை சேர்ந்த ஏலதாரர்கள் மத்-தியில் சலசலப்பு ஏற்பட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை