நிதி நிறுவன ஊழியர் கொலை மேலும் ஒருவர் மீது குண்டாஸ்
கரூர்: கரூர் அருகே, நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைதான, ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்த, செந்தில் குமார் என்பவரது மகன் ஜீவா, 19; நிதி நிறுவன ஊழியர். இவர் கடந்த ஜூலை, 27 ல் முன் விரோதம் காரண-மாக, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சசிக்குமார், 27; பாண்டீஸ்வரன், 20; மதன், 19; சுதாகர், 21; அருண்குமார், 20; மதன் கார்த்திக், 21; கபில் குமார், 20; ஹரி பிரசாத், 20; ஆகிய எட்டு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.அதில் சசிக்குமார், மதன், பாண்டீஸ்வரன், சுதாகர், மதன் கார்த்திக், அருண் குமார், ஹரி பிரசாத் ஆகிய ஏழு பேர் ஏற்க-னவே, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கபில் குமாரையும், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரைபடி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டதற்கான நகலை, தான்தோன்றிமலை போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கபில் குமாரிடம் வழங்கினர்.