உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி

குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, குரும்பபட்டி அரசு உயர்நி-லைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றனர்.குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான கேரம் போட்டி, கரூர் வெண்ணைமலை தனியார் பள்ளியில் நடந்தது. அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்-துகொண்டனர். 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் சுரேஷ்குமார், பூபதிராஜா ஜோடி முதல் இடம், ஒற்றையர் பிரிவில் பூபதி ராஜா இரண்டாம் இடம் பெற்றனர். 14 வயதுக்குட்-பட்டோர் மாணவியர் பிரிவில் காவியா, கார்த்திகா இரட்டையர் பிரிவில் முதலிடம், ஒற்றையர் பிரிவில் காவியா இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் ஹர்ஷினி பிரியா, சிவதர்ஷினி முதலிடம், ஒற்றையர் பிரிவில் ஹர்ஷினி பிரியா மூன்றாமிடம் பெற்றார்.மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். குரும்பபட்டி அரசு உயர்நி-லைப்பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாநில அளவி-லான கேரம் போட்டியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்-கல்வி ஆசிரியர் கதிர்வேலையும், தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்-டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை