உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை மறுநாள் முதல் க்யூ-ஆர் கோடு மூலம் மது விற்பனை

கரூரில் நாளை மறுநாள் முதல் க்யூ-ஆர் கோடு மூலம் மது விற்பனை

கரூர்: கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், 'க்யூ- ஆர்' கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது.டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்க-ளுக்கு, 10 முதல், 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவ-தாக புகார் கூறப்படுகிறது. அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணி-யிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவ-டிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சரியான விலைக்கு விற்-பனை செய்ய, டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சி-களை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது.தற்போது, உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை, டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, உற்-பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன் கூடிய 'க்யூ-ஆர்' கோடு ஒட்டப்படும். அந்த பாட்டில்கள், தொழிற்சாலையை விட்டு வெளியே கொண்டு வருவது முதல், விற்பனையாவது வரை கண்காணிக்கப்-படுகிறது. இதனால், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறு-வது தவிர்க்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்-பனை செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.அந்த வகையில், 'க்யூ-ஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி, மதுபானங்களுக்கு பில் பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும், நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்-டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, 'க்யூ-ஆர்' கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை