உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர்-ஈரோடு சாலையில் எரியாத புதிய விளக்குகள்

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத புதிய விளக்குகள்

கரூர்,: கரூர்-ஈரோடு விரிவாக்க சாலையில், புதிய மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர்-ஈரோடு சாலை வழியாக ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ், லாரி மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், ஈரோடு சாலை வடிவேல் நகர் முதல், ஆத்துார் பிரிவு வரை கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. பிறகு, சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின் கம்பங்கள், விளக்குகள் போடப்பட்டது. ஆனால், மின் கம்பத்தில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர்-ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவு வரை இருளில் மூழ்கி உள்ளது.இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில் மின் கம்பங்களில் உள்ள, புதிய மின் விளக்குகள், இரவு நேரத்தில் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ