டி.என்.பி.எல்., சார்பில் உறுதிமொழி ஏற்பு
கரூர், புகழூர், தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், மத நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலையின் துணை பொது மேலாளர் நாராயணன் தலைமை வகித்தார். நாட்டில் பெருகிவரும் ஜாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிர்க்கும் வகையிலும், வன்முறையிலும் ஈடுபடாமல், மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடவேண்டியும் உறுதிமொழியேற்று கொண்டனர். நிகழ்ச்சியில், உதவி பொதுமேலாளர் சபாபதி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.