உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி பொருட்கள் வழங்கல்

குளித்தலை, கரூர் சம்தாஷினி பவுண்டேஷன் மற்றும் சிநேகிதி அறக்கட்டளை சார்பில், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில், சிநேகிதி அறக்கட்டளையின் ஒரு பகுதியாக சம்தாஷினி பவுண்டேஷன் உதவியுடன், குளித்தலை மற்றும் தோகைமலை ஆகிய பகுதிகளில் உள்ள, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், ஹார்லிக்ஸ், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை அறக்கட்டளையினர் வழங்கினர்.மேலும், அறக்கட்டளை சார்பில் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பொருளாதார முறையில் முன்னேற்றம் அடைவதற்கான தொழில் முனைவோர் பயிற்சி அளித்து வருகிறது. மேலும் பெண்கள் முன்னேற்றம், குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் சினேகிதி அறக்கட்டளை பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்