கரூர் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள், 28 லட்சத்து, 72 ஆயிரத்து, 662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.அங்கு நடந்த ஏலத்தில், 13,359 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 23.89 ரூபாய், அதிகபட்சமாக, 27.29 ரூபாய், சராசரியாக, 26.59 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,071 கிலோ எடையுள்ள தேங்காய், 1 லட்சத்து, 9,151 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 87.99 ரூபாய், அதிகபட்சமாக, 92.89 ரூபாய், சராசரியாக, 91.49 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 54.99 ரூபாய், அதிகபட்சமாக, 88.99 ரூபாய், சராசரியாக, 80.66 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 8,317 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 6 லட்சத்து 87, ஆயிரத்து, 691 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.எள், 209 மூட்டை வரத்தாகி கருப்பு ரகம் குறைந்தபட்சமாக ஒரு கிலோ, 119.79 ரூபாய், அதிகபட்சமாக, 138.29 ரூபாய், சராசரியாக, 136.29 ரூபாய், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 119.09 ரூபாய், அதிகபட்சமாக, 141.29 ரூபாய், சராசரியாக, 137.89 ரூபாய், வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 133.99 ரூபாய், அதிகபட்சமாக, 138.98 ரூபாய், சராசரியாக, 136.48 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 15,519 கிலோ எடையுள்ள எள் 20 லட்சத்து, 75 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 28 லட்சத்து, 72 ஆயிரத்து, 662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.