உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய செயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு, சமவேலை -சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜீ, மாவட்ட பொருளாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ