மேலும் செய்திகள்
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
09-Dec-2024
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனைகிருஷ்ணராயபுரம், டிச. 20-கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாய்க்கால் பாசன தண்ணீர் கொண்டு வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.பூவன் வாழைத்தார், 200 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
09-Dec-2024