உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை

கரூர்: வாங்கல், காவிரி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, 48. இவர், வாங்கல் அருகில் காவிரி ஆற்-றங்கரையோரம் உள்ள, பரிசல் துறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். இதையடுத்து அங்கு வந்த வாங்கல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதிக் அலி எவ்வாறு இறந்தார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ