உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

கரூர் : இன்று, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது என, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் உள்ள பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பில் நவீன உத்திகள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் இன்று (13ம் தேதி) நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக இன்று காலை, 10:30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளலாம். மேலும், விபரம் பெற தொலைபேசி எண், 04324 294335 மற்றும் 7339057073 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி