உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற நடவடிக்கை அவசியம்

சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற நடவடிக்கை அவசியம்

கரூர்: சாயும் நிலையில் இருக்கும், டிரான்ஸ்பார்மரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் அருகில், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டிராஸ்பார்மர் மின் கம்பத்தில் தரை பகுதி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் பிடிமானம் இல்லாமல் சாயும் நிலையில் உள்ளது. பாரம் தாங்காமலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்து விழும் பட்சத்தில், மின்கம்பங்களும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. உடனடியாக டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை