உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகள்

வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகள்

கரூர் : கரூர் மாநகரை சுற்றி, சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர்ப்பெயர், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்களுடன் வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் வளர்ந்து மறைத்துள்ளன. வெளி மாநில வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப் படுகின்றனர்.எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத வகையில் மரக் கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை