உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது

கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 28; இவர் கடந்த, 1ல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பஜாஜ் பிளாட்டினம் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதை காணவில்லை. அதேபோல், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ரமேஷ், 35; என்பவர் கடந்த, 2 ல் பஜாஜ் டிஸ்கவர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதையும் காணவில்லை. இது குறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அப்போது, இரண்டு பைக்குகளை திண்டுக்கல் மாவட்டம், சின்னமந்தை பகுதியை சேர்ந்த பாலமுருகன், 36; என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ