உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தல்

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, நவ. 20-அங்கன்வாடி மையத்தை, சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, மூன்றாவது வார்டு வடக்கு தெருவில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள், இங்கு தொடக்கக் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, சொந்த கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்ததால், தனியார் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது வரை, அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என, இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்லும், அங்கன்வாடி மையத்தை விரைவில் சீரமைத்து சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை