உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு விளக்குகள் பழுது கிராம மக்கள் அச்சம்

தெரு விளக்குகள் பழுது கிராம மக்கள் அச்சம்

கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் அடுத்த பொய்கைப்புத்துார் பஸ் ஸ்டாப் பகுதியில் தெரு விளக்குகள் உள்ளன. மழை காரணமாக சரி வர, கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால் கரூர்-திருச்சி நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எரியாமல் உள்ள தெரு விளக்குகளை சரி செய்து, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை