மேலும் செய்திகள்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் மனு
23-Nov-2024
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின்பறித்த பெண் கைதுகரூர், டிச. 4-கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஓம் சக்தி நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி அன்னக்கிளி, 65; இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்தார். அப்போது, வெள்ளியணை தேவேந்திர நகரை சேர்ந்த தவசி மனைவி மாரியம்மாள், 37; அன்னக்கிளியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அன்னக்கிளி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது, அவர் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை, மாரியம்மாள் பறித்து சென்று விட்டார். அன்னக்கிளி கொடுத்த புகாரின்படி, மாரியம்மாளை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
23-Nov-2024