மகளிர் சுய உதவி குழு புத்தாக்க பயிற்சி முகாம்
கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் பஞ்சாயத்துக்குப்பட்ட முனையனுாரில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளர் பயிற்றுநர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அரசால் வழங்கப்படும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் மற்றும் தொழில் தொடங்க பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.வட்டார வளர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, சுய உதவிக் குழு மகளிர் ஆகியோர் பங்கேற்றனர்.