உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் குரூப் 2 தேர்வு 4,286 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரியில் குரூப் 2 தேர்வு 4,286 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த குரூப் 2 தேர்வை, 11,602 பேர் எழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா-ணையம் குரூப் 2, 2ஏ., வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்ள்ளியில் நடந்த தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 52 மையங்களில் தேர்வு நடந்தது. 15,348 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 11,062 பேர் தேர்வு எழு-தினர். 4,286 பேர் தேர்வு எழுத வரவில்லை. மையங்களை கண்காணிக்க, 52 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஆறு பறக்கும் படை, 14 நடமாடும் அலகு, 55 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் அனைத்து மையங்களுக்கும் அடிப்படை வசதிகள், பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவ்வாறு கூறினார்.கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா, அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உட-னிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை