உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி

டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த பெரியகுட்டூரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 34; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாரதி, 25. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மனைவி, மகன் பிரணவ், 3 மற்றும் ஒன்றரை வயது மகள் யாழினியுடன், 'பல்சர்' பைக்கில் குட்டூரிலிருந்து ராமச்சந்திரம் நோக்கி அஜித்குமார் சென்றுள்ளார்.தர்மபுரி மாவட்டம், சிக்கமாரண்டஹள்ளி அடுத்த சி.எம்.புதுாரைச் சேர்ந்த நந்தகுமார், 40, 'ஹீரோ பேஷன்' பைக்கில் எதிர்திசையில் வந்துள்ளார்.பண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி சாலையில் இருவரது பைக்குகளும் நேருக்குநேர் மோதின. இதில், அஜித்குமார், பிரணவ் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மனைவி பாரதி, ஒன்றரை வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்தனர். நந்தகுமாரும் உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ