உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி

அணை பகுதியில் குளித்த 2 பேர் பலி

ஊத்தங்கரை: பாம்பாறு அணை பகுதி நீரில் குளித்த மாணவியர் இருவர், மூழ்கி உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கீழ்மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவரது வீட்டில் நேற்று முன்தினம், ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க, உறவினர்கள் வந்திருந்தனர். அதில் ஐந்து பேர், கீழ்மத்துார் அருகே பாம்பாறு அணை பகுதியில் குளிக்க, நேற்று சென்றனர். சேலம், செவ்வாய் பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி நீலாஸ்ரீ, 17, கீழ்மத்துாரைச் சேர்ந்த எட் டாம் வகுப்பு மாணவி சாருமேத்ரா, 12, ஆகியோர், அணை நீரில், ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை