உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லி, எம்.சாண்ட் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்

ஜல்லி, எம்.சாண்ட் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, லாரியை பறிமுதல் செய்து, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல, காட்டாகரம் வி.ஏ.ஓ., லெனின் மற்றும் அலுவலர்கள் தட்டக்கல் மின்வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. லெனின் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை