கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கொங்கன்செரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 41. மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி ரவேத்தா, 25. இவர் கடந்த மாதம், 28 காலை, 9:30 மணிக்கு, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரவேத்தா, அதே பகுதியிலுள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர், 30, என்பவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்-தது. மனைவியை மீட்டு, சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுரேஷ், போலீசில் புகார் அளித்துள்ளார். பர்கூர் போலீசார் விசா-ரிக்கின்றனர்.* குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 19, வயது கல்லுாரி மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 29 காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், ஒரு வாலிப-ருடன் காதலித்தது தெரிந்தது. அந்த வாலிபரிடமிருந்து மகளை மீட்டுத்தர, அவரது பெற்றோர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.