உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா, லாட்டரி விற்ற 20 பேருக்கு காப்பு

குட்கா, லாட்டரி விற்ற 20 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற பில்லனகுப்பம் சுரேஷ், 37, கிருஷ்ணகிரி செந்தில், 38, காவேரிப்பட்டணம் அய்யப்பன், 49, உள்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,450 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும், 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே போல், குட்கா விற்றதாக, கிருஷ்ணகிரி முகமது சபீர், 40, மோரனஅள்ளி தங்கம் உள்பட, 14, பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,060 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை