மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்
23-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி கடந்த, 10ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரின் பெற்றோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த மனோஜ், 24, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர். பர்கூரை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவி, கடந்த, 10ல் மாயமானார். அவரின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், பர்கூர் அடுத்த மேல் பூங்குருத்தியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளியை சேர்ந்தவர் அன்னக்கொடி, 28; கடந்த, 10ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சக்திவேல் போச்சம்பள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், போச்சம்பள்ளியை சேர்ந்த நரசிம்மன், 35, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல, ஓசூர், தொட்டகிரி ரோடு எஸ்.எம்.டி., நகரை சேர்ந்தவர் ஹமீன்தாஜ், 50; இவர் கடந்த, 9ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சையது இயாத் புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2024