உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்தியவருக்கு வலை

மண் கடத்தியவருக்கு வலை

கிருஷ்ணகிரி, மத்துார் எஸ்.எஸ்.ஐ., மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் எட்டிப்பட்டி கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். லாரியை சோதனையிட்டதில், மூன்று யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த ஊத்தங்கரை அடுத்த சண்டியப்பனுாரை சேர்ந்த விஜயராகவன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ