உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

கிருஷ்ணகிரி: மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று, சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா நடப்பது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, கணபதி பூஜை, கலசஸ்தாபனம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நடராஜ மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, விேஷச திரவ்ய திருமஞ்சனமும், காலை, 7:00 மணிக்கு, திருவெம்பாவை உற்சவம், கோபுர தரிசனம், தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை பிரசன்ன பார்வதி உடனுரை சோமேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, பார்வதி சமேத நடராஜர், சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து முன்னணி இணைந்து, நடராஜர் ஊர்வலத்தை நடத்தினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை